Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் காதலிக்கு உயில் எழுதி வைத்த முன்னாள் பிரதமர்!

காதலிக்கு உயில் எழுதி வைத்த முன்னாள் பிரதமர்!

0 minutes read

இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமரும், இத்தாலி அரசியலின் கிங் மேக்கருமாக இருந்த மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, தனது காதலிக்கு 100 மில்லியன் யூரோ சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்.

இத்தாலியில் மூன்று முறை பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. 86 வயதான இவர், ரத்தப் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் 12ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரின் சொத்துக்கான உயில் சில தினங்கள் முன் அவரின் ஐந்து குழந்தைகள் முன் வாசிக்கப்பட்டது.

அதன்படி, ஃபின்இன்வெஸ்ட் என்று பெர்லுஸ்கோனி குடும்பம் நடத்தி வரும் கம்பெனிகளில் இருந்து இனி கிடைக்கும் பங்குகள் ஆகியவற்றை ஐந்து குழந்தைகளுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார்.

அதேவேளை, தனது சகோதரர்கள் இருவருக்கும் ஆகியோருக்கு 130 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்படி உயில் எழுதி வைத்துள்ள பெர்லுஸ்கோனி, தனது காதலியான மார்டா ஃபேசினாவுக்கு 100 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்படி எழுதியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More