கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தாலும் ஏராளமான அகதிகளுக்கு லெபனான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.
எனினும், லெபனான் நாட்டில் இலட்சக்கணக்கான அகதிகள் குடிபெயர்வது அங்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சிரியாவில் இருந்து மட்டும் சுமார் 20 இலட்சம் பேர் அங்கு ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்நிலையில், வேலைவாய்ப்பு தொடர்பாக உள்நாட்டு மக்களுக்கும், அகதிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, அகதிகளால் ஏற்படும் குற்றச்செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுவதாக, லெபனான் பாதுகாப்பு துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.