Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கான தூதரகத்தை நிரந்தரமாக மூடுகிறது நோர்வே!

இலங்கைக்கான தூதரகத்தை நிரந்தரமாக மூடுகிறது நோர்வே!

1 minutes read

இலங்கைக்கான நோர்வே தூதரகம், இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதியுடன் அதன் அனைத்து செயற்பாடுகளையும் முடித்துக்கொள்ளவுள்ளது.

ஓகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தின் பேஸ்புக் பக்கம் மூடப்படும் எனத் தெரிவித்துள்ள தூதரகம், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் பக்கத்தைப் பின்தொடருமாறு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுடனான அதன் தற்போதைய ஒத்துழைப்பு குறித்த கூடுதல் தகவல்கள் புதிய பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது @NorwayAmbLK எனும் ட்விட்டர் கணக்கு புதுப்பிக்கப்பட மாட்டாது என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெடல் தெரிவித்துள்ளார்.

புதுப்பிப்புகளுக்கு @norwayinindia ஐப் பின்தொடருமாறு பொதுமக்களை தூதரம் கேட்டுக்கொண்டது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More