பிலிப்பைன்ஸில் மரப்படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு கடலோரக் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) இடம்பெற்ற இந்த விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த படகில் மொத்தம் 42 பயணிகள் பயணம் செய்யக்கூடிய நிலையில், அதில் சுமார் 70 பேர் பயணித்துள்ளனர்.
பலத்த காற்று வீசியதால் பயணிகளிடையே அச்சம் உண்டானதுடன், அவர்கள் அனைவரும் படகின் ஒருபக்கம் நகர்ந்தபோது படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் 40 பேர் உயிர் தப்பியதுடன், 3 பேரைக் காணவில்லை.
டொக்சூரி புயல் பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் வீசிய சில மணிநேரத்தில் படகு விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.