ஈரானில் காற்று மாசடைந்ததோதன் விளைவாகபாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் சில நாட்களாக இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காற்று மாசுக் காரணமாக மாணவர்களுக்கு சுவாச கோளாறு தொடர்பான உடல் நலக்கோளறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காற்று மாசுக் காரணமாக விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுக் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.