Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல-திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள்.

மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல-திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள்.

1 minutes read

மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சர் மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல தமது நாடு என தெரிவித்ததே இந் நிலைக்கு காரணமாகும் . பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின்  2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.ஆனாலும் மலேசியாவும் ஏனைய நாடுகளும் இதற்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மேலும் 110 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More