புதிய உணவை ருசித்து, புதிய கலாச்சாரங்களை அறிந்து தஞ்சம் கோருபவர்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்கத்தில் ‘சுதந்திரத்திற்கான விருந்து’ ஏற்பாடு செய்யப்படுகின்றது.
தனது தாயகமான ஈரானிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், ‘ஹமித் அல்லாஹயரி’ டெஹ்ரானில் பாரம்பரிய உணவகத்தை நடத்தி வந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் புதிய வாழ்க்கையை ஹமித் தொடங்கியபோது, சமையல் கலைஞராக பணியாற்ற 50 உணவகங்களுக்கு மேல் பார்வையிட்டிருக்கிறர். ஆனால், அவருக்கு சமையலறையை பராமரிக்கும் வேலையே கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தில் தன்னார்வ ரீதியாக 250 பேருக்கு சமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார் ஹமித். இரண்டுஆண்டுகளுக்கு பிறகு, சமையலறை மேலாளராக பதவி உயர்வு பெற்ற ஹமித் இன்று கேட்டரிங் நிறுவனத்தை நடத்தும் நிலைக்கு உயரந்திருக்கிறார்.
இவ்வாறான சூழலில், தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் ‘சுதந்திரத்திற்கான விருந்து’ எனும் ஆண்டு விருந்தில் முக்கிய சமையல் கலைஞராக ஹமித்இருக்கிறார். இதன் மூலம், தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிதியுதவி செய்யும் வகையில்மற்றவர்கள்/ நிறுவனங்கள் இதுபோன்ற விருந்தை ஏற்பாடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றது.
“குடியேறிகளின் மற்றும் அகதிகளின் குழந்தைகளாக நமது மனித நேயத்தை, நமது கதைகளை, நமது பயணங்களை என நம்மை பிணைக்கும் விஷயங்களை சுதந்திரத்திற்கான விருந்தில் பகிர்ந்து கொள்வதாகும்,” தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் கோன் கரபனகியோடிடிஸ்.
இவ்விருந்தின் இன்னொரு சமையல் கலைஞரான ஜெனிட் பிடா, எத்தோப்பியாவில் பிறந்து டிசம்பர் 2010ல் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர். 13வயதிலிருந்து சமைக்கும் இவர், தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தில் தன்னார்வலராக இருக்கிறார்.
“இம்மையம் எனக்கு பல விஷயங்களை செய்துள்ளது. அதனால் தான் தஞ்சக்கொரிக்கையாளர்களுக்கு உதவ எண்ணுகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு நான் உதவ நினைக்கிறேன்,” எனக் கூறுகிறார் ஜெனிட் பிடா.இவ்வாறான விருந்தின் மூலம் 4 லட்சம் டாலர்கள் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.