கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வரும் பாகிஸ்தான், தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தது. பொதுவாக பாகிஸ்தானில் குளிர் காலங்களில் மட்டும் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் இந்த முறை, அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக அங்கேயே தங்கியுள்ளன.
இதனால் கராச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிக்கும் மேல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த, உடனடியாக உதவுமாறு, பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியுள்ளது.