0
ஜப்பானில் March மாதம் தொடக்கம் முதல் May மாதம் வரை வசந்த காலமாகும். தற்போது ஜப்பானில் வசந்த காலம் நிலவி வருவதால் செர்ரி பூக்கள் அதிகளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. புகுவோகா, ஒஷாகா, நகோயா, டோக்கியோ, சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகரங்களிலுள்ள பூங்காக்களில் செர்ரி பூக்கள் பூக்க தொடங்கிவிட்டது.
இந்த நிகழ்வை காண ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் பூங்காக்களுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனாவால் பூங்காக்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்த நிலையில் அங்கு விடுமுறை விடப்பட்ட பாடசாலைகளை விரைவில் திறக்க ஜப்பானிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பானில் கொரோனாவால் பாதிப்பு சற்று குறைவுதான் என்றாலும், இந்த வருடம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மையான தகவலை ஜப்பான் அரசாங்கம் மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றது.
வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
—