உலகையை நிலைக்குலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பிறந்த இடமாக கருதப்படும் சீனாவின் ஊகான் நகரில், மீண்டும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் நகர் முழுவதும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை அமுலில் இருந்த கடுமையான ஊரடங்கு உத்தரவால் கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து வந்த நிலையில், ஊகானில் ஒரே குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு அறிகுறி இன்றி நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதிலும் உள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஊகான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.