ஈராக்கில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) பணிக்காக 8 லட்சத்து 66 ஆயிரம் டாலர்கள் ஆஸ்திரேலிய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி மூலம் அடுத்த ஆண்டு ஈராக்கின் Duhok மற்றும் Nineveh நிர்வாகத்தின் கீழ் உள்ள 38,000 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.
இந்த நிதி அடிப்படையில், சிரியாவின் வட கிழக்கில் நடந்த ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெளியேறி ஈராக்கில் தஞ்சமடைந்துள்ள சிரியா அகதிகள் நலனுக்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வயது வந்த பெண்களுக்கான சுகாதார உதவிகள் வழங்கப்பட பயன்படுத்தப்பட இருக்கின்றது.
“வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வன்முறையற்ற உலகத்தில் வாழ்வதற்காகவும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதிச்செய்யவும் ஐ.நா. மக்கள் தொகை நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதில் ஆஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது,” எனக் கூறியுள்ளார் ஈராக்கிற்கான ஆஸ்திரேலிய தூதர் Dr Joanne Loundes.
“ஈராக்கில் ஐ.நா.மக்கள் தொகை நிதியத்தின் பணிக்கு ஆஸ்திரேலியா நிலையான மற்றும் நம்பகமான கூட்டாளி இருக்கின்றது. கடந்த அக்டோபர் 2014ம் ஆண்டு முதல் ஈராக்கில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்கு 16.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார் ஈராக்கிற்கான ஐ.நா.நிதியத்தின் பிரதிநிதி Dr Oluremi Sogunro.