Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா அவசரகால நிலை பிரகடனத்தை முன்வைத்தத்து கனடா…..

அவசரகால நிலை பிரகடனத்தை முன்வைத்தத்து கனடா…..

1 minutes read

கனடாவின் நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் நேற்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.இதனால் கனடாவின் நியூபவுண்ட்லாந்து (Newfoundland) மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவதானமாக செயற்படுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

அதிக பனிப்பொழிவின் காரணமாக வர்த்தக நிலையங்களை மூடுமாறும் மக்களை வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

வீதிகளில் சுமார் 2 அடி வரை பனி படர்ந்துள்ளதுடன் வாகனங்களும் பனியினால் மூடப்பட்டுள்ளன.

சில பகுதிகளுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

தமது ட்விட்டர் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள கனேடிய பிரதமர், தேவையேற்படும் பட்சத்தில் சகல உதவிகளையும் வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More