மியான்மரில், ஊரடங்கை மீறி, கூட்டுப் பிரார்த்தனை நடத்திய மத போதகரின் ஜாமீன் மனுவை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஊரடங்கின் போது, கனடா நாட்டை சேர்ந்த மத போதகரான டேவிட் லா ஏராளமானோரை திரட்டி, ஜெப வழிபாடு நடத்தினார்.
இதில் பங்கேற்ற 20 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மத போதகருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு, 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.