ரஷ்யா நாட்டின் டிமிரிட்டி லிசின் என்ற 21 வயது இளைஞரும், ஒலாகா புடுனோவா என்ற 45 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசன், மனிதர்களை கொலை செய்து, உடலை தின்னும் சடங்குகள் குறித்தும் அதிகமாக வாசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.
இந்நிலையில், தனது காதலியின் வீட்டுக்கு சென்ற டிமிரிட்டி, மதுபான போத்தலினால் காதலியின் தலையில் 25 முறை கொடூரமாக தாக்கி அவரை கொலை செய்துள்ளான்.
அதனைத் தொடர்ந்து அவளது மூளையை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளான். இதையடுத்து, ஒலாகா புடுனோவாவின் கொலை தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சைக்கோ கொலைகாரனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
தனது காதலியை கொடூரமாக கொலை செய்து மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.