உலகச் சுகாதார அமைப்பு கருத்து தெரிவிக்கையில் நிமோனியாக் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
அதாவது 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்நோயை தடுக்கமுடியும் என்றும், அது குணப்படுத்தக்கூடிய நோய் என்றும்கூறியுள்ள இவ்வமைப்பு நிமோனியாக் காய்ச்சலைத் தடுக்க சிறந்த வசதிகள் இருந்தபோதும் குழந்தைகள் அதிகளவில் இறப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது.
நிமோனியாக் காய்ச்சல் நுரையீரலைத் தாக்கும், அதனால் மூச்சுக்கோளாறு ஏற்பட்டு மரணத்தில் முடியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமும், சில குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து நிமோனியாக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுஅனைத்து நாடுகளுக்கும் உலகச் சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகின்றனர்.