0
பாரிஸில் வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் பலியாகியுள்ளனர்.
நேற்று Finistère நகரில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் போது D770 வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றது. 15, 18 மற்றும் 21 வயதுடைய மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இரு சகோதரகளும் ஒரு சகோதரியும் மொத்தம் மூவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மகிழுந்தை உயிரிழந்த 21 வயதுடைய நபரே செலுத்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான மற்றைய வாகனத்தில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.