Newcastle-ஐ சேர்ந்தவர் ஆண்ட்ரூ. இவர் மனைவி Deirdre Morley. இந்த தம்பதிக்கு Conor (9), Darragh (7) என்ற இரண்டு மகன்களும் Carla McGinley (3) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று குழந்தைகளும் வீட்டில் சடலமாக கிடந்தனர்.
அவர்களின் சடலங்களை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
வெளியில் இருந்து வந்த யாரோ குழந்தைகளை கொன்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக குழந்தைகளின் தாயார் Deirdre Morley தான் கொலை செய்தார் என கூறி பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.