Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா கண்கள் வந்த அதிசயம் .

கண்கள் வந்த அதிசயம் .

1 minutes read

போலாந்தில் 20 வருடங்களுக்கு மேலாக கண்பார்வையில்லாமல் வாழ்ந்து வந்த நபரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான பின்னர் அவருக்கு பார்வை கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gorzow Wielkopolski நகரை சேர்ந்தவர் Janusz Goraj. இவருக்கு கண்களில் உள்ள ரெட்டினாவில் ஏற்பட்ட பாதிப்பால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பார்வையில்லாமல் இருந்தது.

இதனால் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் Janusz சாலையில் நடந்து சென்ற போது அவர் மீது கார் வேகமாக மோதியது, இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 15 நாட்களில் அவரின் உடல் நிலை குணமானதோடு அடுத்து நம்பமுடியாத பெரும் ஆச்சரிய சம்பவமும் நடந்தது.

அதாவது, Janusz-க்கு பார்வை தெரிய தொடங்கியது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பலத்த காயத்துடன் வந்த Janusz-க்கு சிகிச்சையளிப்பதில் மட்டுமே எங்கள் கவனம் இருந்ததே தவிர அவரின் கண்கள் குறித்து நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More