உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து, இன்றுடன் (பெப்.24) ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதனையொட்டி, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைக் (Volodymyr Zelensky) காணொளி வழியாக G-7 தொழில்வள நாட்டுத் தலைவர்கள் சந்திக்கவுள்ளார்.
இந்தப் போரில் மேற்கத்திய நாடுகள் பல உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன.
உக்ரேனுக்குக் கூடுதல் உதவிகள் வழங்குவதோடு, ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகளை விதிக்க அவர்கள் முற்படுகின்றனர்.
இதேவேளை, போர் தொடங்கி ஓராண்டு நிறைவை அனுஷ்டிக்கும் போது, உக்ரேன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று உக்ரேன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.