இன்னும் 12 வருடங்களில் அதாவது, 2035ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் உடற்பருமன் உடையவர்களாக இருப்பர் என அறிக்கையொன்றை சுட்டிக்காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
அது சுமார் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகைக்கு சமமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏழை நாடுகள் உட்பட உலகில் வயது குறைந்தோரிடம் உடற்பருமன் அதிகரிக்கும் சதவீதம் அதிகரித்து வருவதாக, உலக உடற்பருமன் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைமையை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென குறித்த சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
உடற்பருமனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக உடற்பருமன் சம்மேளனம் எச்சரித்துள்ளது.