கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, காமுகர்கள் கோயிலில் 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளனர்.
இதனையடுத்து இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சஞ்சய் ராம், ப்ரவேஷ் குமார் மற்றும் தீபக் கஜோரியா ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மற்ற 3 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி -zeetamil