Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இதெல்லாம் வேலைக்கு ஆகாது; இளம் வீரருக்கு எச்சரிக்கை!

இதெல்லாம் வேலைக்கு ஆகாது; இளம் வீரருக்கு எச்சரிக்கை!

1 minutes read

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் பீல்டிங் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அவரது பீல்டிங் பல குறைகள் இருந்தன.

ரிஷப் பந்த் பீல்டிங் குறித்து பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘

‘ரிஷப் பந்துக்கு பீல்டிங் குறித்து அதிக அளவில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அவர் பந்தை த்ரோ செய்யும் டெக்னிக்கலில் முன்னேற்றம் அடைவது அவசியம். அத்துடன் அவுட்பீல்டு பகுதியில் வேகமாக ஓட வேண்டும்.

அவரை நாங்கள் பீல்டிங் பகுதியில் பயன்படுத்தி வருகிறோம். அவருக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது குறைந்தது ஐந்து ரன்களையாவது பீல்டிங்கின் போது சேமித்திருப்பார். இது அணிக்கு மிகப்பெரிய போனஸாக அமைந்தது. சிறப்பாக கேட்ச் பிடித்தார்’’ என்றார்.

நன்றி-mohamed

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More