Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ராகுல் காந்தி போல் செயல்படுவதற்கு, சிலரிடம் மட்டுமே தைரியம் உள்ளது.

ராகுல் காந்தி போல் செயல்படுவதற்கு, சிலரிடம் மட்டுமே தைரியம் உள்ளது.

1 minutes read

மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக தொடர்ந்து தெரிவித்த வந்த ராகுல் காந்தி, நேற்று அதனை உறுதி செய்தார்.

தான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலமையிடம் அளித்து விட்டதாகவும் நேற்று தெரிவித்த அவர், புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அந்த நடைமுறையில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவிட்ட ராகுல்

“ இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்கள் அதிகாரத்துடன் ஒன்றினைந்துள்ளனர். யாரும் அதிகாரத்தை தியாகம் செய்ய முன்வருவதில்லை. ஆனால் நம் பதவிக்கான விருப்பத்தை நாம் விட்டுத்தராவிட்டால், நம்மால் எதிரிகளை தோற்கடிக்க முடியாது.

அப்போது தான் ஆழ்ந்த கருத்தியல் ரீதியான யுத்தத்தில் போராட முடியும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுலின் டிவீட்டிற்கு பதில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ நீங்கள் (ராகுல்காந்தி) செய்ததை செய்வதற்கு வெகு சிலரிடம் மட்டும் தைரியம் இருக்கும். உங்கள் முடிவு மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி-zeetamil

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More