கொரானா தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத்துவங்கியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு நாடுகளை நோக்கி திருப்பி உள்ளன.கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தக-பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதால் இந்தியா ஏற்கனவே ஏற்றுமதிக்கு உகந்த நாடாக பல நிறுவனங்களால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றால், உற்பத்திக்கான நாடாகவும் இந்தியாவை அந்த நிறுவனங்கள் பார்க்கத் துவங்கியுள்ளன.