மருத்துவ மாணவி நிர்பயாவை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரேசமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இன்று தான் திருப்திகரமாக இருப்பதாக நிர்பயாவின் தாய் கூறியுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் இந்த குற்றத்தை எண்ணி மிகவும் வேதனைப்பட்டது. இதற்கு தீர்வு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நிர்பயா குற்றவாளிகள் போன்று தண்டனையை தாமதப்படுத்தாத வகையில் உச்ச நீதிமன்றம் சட்ட வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இனி வரும் வழக்குகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் – நிர்பயா தாய்
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நான்கு குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து பார்த்து உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர் – சந்தீப் கோயல், திகார் சிறை இயக்குநர்
நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, திகார் சிறை முன்பு பெண்கள் உரிமை ஆர்வலர் யோகிதா பயானா இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நீதி தாமதப்படுத்தப் பட்டது. ஆனால் மறுக்கப்படவில்லை – ஆஷா தேவி