நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடர் 7 முதல் 8 வாரங்களுக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தொடரின்போது 11 சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.
இதன்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.