ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆலய தேர் நள்ளிரில் தீப்பற்றி எரிந்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கு சொந்தமான தேர், ஆலய வளாகத்திலுள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து சேதமாகியுள்ளது.
இவ்வாறு ஆலயத்துக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.