இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திறந்த நம்பகமான நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்தியாவும், ஜப்பானும் உறுதியாகவுள்ளன.
இதன் ஒரு கட்டமாக இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்கங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உட்கட்டமைப்பு பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீனா இணைய வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளதுடன், சீனாவுக்கு சொந்தமான செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.