இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 50,357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84 இலட்சத்து 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 577பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி, உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 5 இலட்சத்து 16ஆயிரம் பேர், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்கைப் பெற்று வருகின்றனர்.