பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ஆர் அணி மற்றும் தேனாண்டாள் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர தலைவர் பதவிக்கு பி.எல்.தேனப்பன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் களத்தில் உள்ளனர். இந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது
0