Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இலங்கை தமிழர்கள் மீதான கரிசனை தேர்தல் நிறைவடைந்த மறுநாள் முடிவடைகின்ற விடயமாகிவிடக்கூடாது

இலங்கை தமிழர்கள் மீதான கரிசனை தேர்தல் நிறைவடைந்த மறுநாள் முடிவடைகின்ற விடயமாகிவிடக்கூடாது

1 minutes read

இலங்கை தமிழர் மீதான கரிசனை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்து தேர்தல் நிறைவடைந்த மறுநாளிலேயே முடிவடைகின்ற விடயமாகி விடக்கூடாது  என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டிருக்ககூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும் எனவும் இதனை தேர்தல் கால விவகாரமாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடக நிறுவனமொன்றின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை மற்றும் இந்திய மக்களிடையே மொழியால் நெருங்கிய உறவு காணப்படுகிறது.

இருநாட்டு தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது சரியானது. ஏனெனில் அது இயற்கையானதொன்றாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கை தமிழ் மக்கள் மீதான எமது கரிசனை என்பது தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்பட்டதொன்றாக இருக்க முடியாது. இதனை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனையோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரித்து, பின்னர் அது தணிந்து போயுள்ளதை அவதானத்திருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More