Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!

அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசி: இந்தியாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!

2 minutes read

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனத்தின் தயாரிப்பினை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.

ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைக்கு எந்தவொரு விரைவான ஒப்புதலும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்தியா தனது சொந்த உள்நாட்டு தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்துகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீரம் நிறுவனத்தின் 10 மில்லியன் அளவுகளில் இரண்டாம் பாதியை ஏற்றுமதி செய்ய பிரிட்டன் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரம் முதலில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் எழுதிய கடிதமொன்றில், தயவுசெய்து எங்களுக்கு (ஏற்றுமதி) ஒப்புதல்களை வழங்குங்கள் என்ற கோரிக்கை கடிதமொன்றினைஅனுப்பி வைத்திருந்தார்.

சீரம், அஸ்ட்ராஜெனகா மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் குறித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், ஆணைக்குழுவிற்கு உடனடி கருத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மார்ச் மாதத்திலிருந்து மீண்டும் அதிகரித்துள்ளமையினால், இப்போது தனது சொந்த நோய்த்தடுப்பு இயக்கத்தை விரிவாக்குவதில் கவனம் செலுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான டோஸை வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்காக அரசாங்கம் உள்நாட்டில் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த அதன் உள்நாட்டுத் தேவைகளில் கவனம் செலுத்துவதற்கான அதன் முடிவு, கோவாக்ஸ் எனப்படும் தடுப்பூசி விநியோகத்திற்கான WHO- ஆதரவு உலகளாவிய வலையமைப்பையும் பாதிக்கும்.

கொவிட் -19 தடுப்பூசிகளை முதன்மையாக ஏழை நாடுகளுக்கு வழங்குவதன் முக்கிய நோக்கம் அதனை பாதுகாப்பதாகும்.

உற்பத்தி குறைபாடுகளினால், 27 நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியத்தில் 450 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் குறைத்துள்ளன. இங்குள்ள தனிநபருக்கான நோய்த்தடுப்பு மருந்துகள், இஸ்ரேல், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை விட பின்தங்கியுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை 64 நாடுகளுக்கான தடுப்பூசி அளவை, 83 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், தடுப்பூசி தேவை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பான தரவுகள், இந்தியாவில் 12.22 மில்லியன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையில் உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத்தட்ட 163,000 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More