Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு!

1 minutes read

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை நேற்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் 21ஆம் திகதி வரை, 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், உஷ பூஜை, நிர்மால்ய தரிசனம், உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பின்னர் 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு, 6 மணிக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் செய்து, இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மேலும் கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக, இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள், இணையத்தின் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More