காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை” என பதிவிட்டுள்ளார்.