Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கணவன்

மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கணவன்

1 minutes read

தனது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கணவனை இந்திய ஜார்க்கண்ட் மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்திய ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் ரூபிக்கா என்பவருக்கும் அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்சாரிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இந்த பெண் ரூபிகாவை 10-15 நாள்களுக்கு முன்னர் தான் இரண்டாவது திருமணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ரூபிகா கடந்த சில நாள்களாக மாயமான நிலையில், ரூபிகாவின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டருகே நாய்கள் எலும்புகளை கடித்து உண்டு கொண்டுதிருந்ததை அப்பகுதியினர் சந்தேகத்துடன் பார்த்துள்ளனர்.

அந்த எலும்புகள் மனித எலும்புகள் போல இருந்த நிலையில், உள்ளூர்வாசிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் எலும்புகளை மீட்டெடுத்துள்ளனர்.

சந்தேகமடைந்த பொலிஸார் அன்சாரியின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் அங்கு பல துண்டுகளாக வெட்டி சிதைக்கப்பட்ட ரூபிகாவின் உடலை கண்டெடுத்துள்ளனர்.  

பழங்குடியின பெண் ரூபிகாவை அன்சாரி கொலை செய்ததும் அவர் மனைவியை கொன்று 18 துண்டுகளாக வெட்டு சிதைத்ததும்  விசாரணையில் அம்பலமான நிலையில், அவரை கைது செய்து பொலிஸார்  சிறையில் அடைத்தது. மேலும், ரூபிகாவின் தொலைந்து போன உடல் பாகங்களை மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடி வருகிறது.

நன்றி tamil.news18

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More