Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் படகுகள் மூலம் இங்கிலாந்து செல்லும் அகதிகளின் நிலை…..

படகுகள் மூலம் இங்கிலாந்து செல்லும் அகதிகளின் நிலை…..

1 minutes read

இங்கிலாந்திற்கு படகு மூலம் குடியேறிகள் தஞ்சமடைவதை தடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையில் செயல்பட்ட முன்னாள் அதிகாரியை இங்கிலாந்து உள்துறை தொடர்புகொண்டிருக்கின்றது.

Roman Quaedvlieg என அறியப்படும் அந்த ஆஸ்திரேலிய எல்லைப்படையின் முன்னாள் தலைமை அதிகாரி, அவரது செயல்பாட்டு காலத்தில் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த அகதிகள் படகுகளை வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள Roman Quaedvlieg, குறிப்பிடத்தக்க அளவில் குடியேறிகளின் வருகையை குறைக்க வேண்டும் என்றால் (ஆஸ்திரேலியா) பின்பற்றியது போன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து அறிமுகப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆண்டு, இதுவரை இங்கிலாந்தில் 1,600க்கும் மேற்பட்ட குடியேறிகள் படகு மூலம் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதுபோன்ற படகு வருகைகளை தடுக்கவே, ஆஸ்திரேலியாவின் எல்லைக்கட்டுப்பாடு நடவடிக்கை போன்று நடவடிக்கை மேற்கொள்ளலாம் என இங்கிலாந்து சிந்தித்து வருவதாக சொல்லப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கை மனித உரிமை மட்டங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிய ஒரு நடவடிக்கை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, ‘கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம், அவர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும்’ எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More