ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் ஆரம்பித்து ஒரு வருட நிறைவையொட்டி, லண்டன் வீதியில் உன்ரைனின் கொடி ஓவியம் வரையப்பட்டுள்ளது.
“Led By Donkeys” என்ற பிரசாரக் குழு, சைக்கிள்கள் மற்றும் தூரிகைகளைப் பயன்படுத்தி வீதி முழுவதும் 300 லிட்டர் பெயிண்ட்டைப் கொட்டி, 500 சதுர மீட்டர் (5382 சதுர அடி) கொடியை உருவாக்கியுள்ளது.
இதற்காகப் பயன்படுத்திய பெயின்டில் நச்சுப்பொருட்கள் எதுவுமில்லை என்றும், அதை எளிதாக தண்ணீர் ஊற்றிக்கழுவி, அப்பபுறப்படுத்திவிடலாம் என அதை வரைந்த குழுவினர் தெரிவித்தனர்.
உக்ரைன் சுதந்திர நாடு, அங்கு வாழும் மக்களுக்கு சுயமாக வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன. லண்டனின் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வெளியே வரையப்பட்டுள்ள இந்த உக்ரைன் கொடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அதை அறிவுறுத்திக்கொண்டே இருக்கும் என்று அக்குழுவினர் கூறியுள்ளனர்.
இதேவே, இந்தக் கொடி உருவாக்கத்தின் போது, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தாகவும், நெடுஞ்சாலையில் சேதத்தை ஏற்படுத்தியதற்காகவும் 3 ஆண்களும், 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நெடுஞ்சாலையான கென்சிங்டன் அரண்மனை தோட்டத்திலும் ஒரு பெண் உள்பட 4 பேரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையிலும், முன்னெச்சரிக்கையாகவும் கைது செய்ததுடன், அவர்கள் தொடர்ந்து காவலில் உள்ளதாக பொலிஸார் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.