Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எமது பாரம்பரியம் தான் எமது அடையாளம் – வட மாகாண முதலமைச்சர்

எமது பாரம்பரியம் தான் எமது அடையாளம் – வட மாகாண முதலமைச்சர்

1 minutes read

கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில் புதிதாக உருவாக்கப்பட்ட  “மரபுரிமைகள் நிலையம்” இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

அருகிப்போன எமது மூதாதையர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, அவர்களின் பாவனைப் பொருட்கள் பற்றி எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், கௌரவ அமைச்சர் சர்வேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்விற்கு வருகை தந்த வட மாகாண முதலமைச்சர், குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

“வட கிழக்கு மாகாண தமிழர் தாயகம் நீண்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டது. அத்துடன் எமது வாழ்வியல் முறைகளில் அறிவியல் சார்ந்த தொழிநுட்பமும் ஆங்காங்கே காணப்பட்டன. எனினும் கால ஓட்டத்தில் மேலைத்தேய கலாச்சாரங்களை நாம் பின்பற்றத் தொடங்கியதால், எமது சந்ததி வழிவந்த அடையாளங்களை நாம் தொலைக்க முற்பட்டதாலும் இன்று எமது வாழ்வியல் அடையாளங்கள் எம்மைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

அன்று நாம் பாவித்த பொருட்கள் எதுவும் இன்று பாவிப்பதில்லை, அது வெறும் காட்சிப்பொருளாக மாறிவிட்டது. அவற்றைப்பயன்படுத்துவது நாகரிகமில்லை என்று கருதுகின்றார்கள். நாகரிகம் என்ற பெயரில் நாமே நோய்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்கின்றோம்.
இன்றைய இளைய தலைமுறையினர் எம்முடைய மரபுவழி வந்த வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள வேண்டும், அதற்காக எம்முடைய பால்ய வயது வாழ்க்கைக்கு அவர்களை மாறுங்கள் என்று கூறவில்லை. வாழ்க்கை மாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள வெட்டியதொரு நிகழ்வு. ஆனால் எமது அடிகளைத் துருவி ஆராய்வதிலும் அவற்றில் காணும் தொழில்நுட்ப சிறப்பை பங்கிட்டுக் கொள்வதிலும் பல நன்மைகள் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More