Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாசிக்குடா மரதன் ஓட்டப்போட்டி – பிரான்ஸ் நாட்டு யுவதிகள் பங்கேற்பு!

பாசிக்குடா மரதன் ஓட்டப்போட்டி – பிரான்ஸ் நாட்டு யுவதிகள் பங்கேற்பு!

2 minutes read
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப்போட்டியொன்று நேற்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவதிகள் கலந்து கொண்ட இந்த மரதன் ஓட்டம் நேற்று காலை கல்குடா கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது.
 
அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 267 போட்டியாளர்களும், இலங்கைப் போட்டியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
கல்குடா கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்மடுவில் காலை 6.45 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டி விநாயகபுரம், பேத்தாழை, கருங்காலிச்சோலை ஆகிய கிராமங்கள் ஊடக சென்று மீண்டும் பாசிக்குடா கடற்கரையைச் சென்றடைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More