Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைக்கு தீர்வு!

தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைக்கு தீர்வு!

1 minutes read

ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

முல்லை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம்.

இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்கள் எங்கே என கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் 824ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

ஜனாதிபதியவர்களை ஏற்கெனவே பலதடவைகள் நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காக இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்திருந்தோம்.

ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை.

எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம்.

ஒவ்வொரு உறவினர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீதி வீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள், தலைமை அமைச்சர், எங்களுடைய அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள்,

ஜனாதிபதி என அனைவரிடமும் மன்றாடி கேட்டு தெருவிலே அழுது புரண்டுகொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும்.

எங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.

இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், உண்மையிலேயே தர்மத்தினைப் போதித்த புத்தருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்ற இந்த அரசும், புத்த தேரர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு எமது உறவினர்களை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம்.

இதற்கு ஒரு முடிவுகட்டுவதட்க்கு அவர்களின் மனம் இடம்கொடுக்கவில்லை.

நன்றி – முல்லை டாம்போ

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More