என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்
வெறுப்பின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு விடயமும் தற்போதைய அரசாங்கத்தினுள் தனக்கு இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைவரும் ஜாதி, மதங்களுக்கு உட்படாமல் ஒன்றாக இருக்கக்கூடிய கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணமாக இருந்த பசில் ராஜபக்ஷவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டதாகவும் ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிற்கு வராமல் இருக்க செய்வதற்காக அரசியலமைப்பை மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அவ்வாறான விடயங்களை செய்து தமது சுதந்திரத்தை பறித்தாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சுதந்திரத்தை அர்ப்பணிப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை எனவும், வெறுப்பினூடாக அரசியலை எடுத்து செல்ல முடியும் என தற்போது தீர்மானமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெறுப்பை முன்னெடுத்து செல்ல அரசியலிற்கு வருவதில்லை எனவும் தன்னை நேசிக்கும் மக்களிற்காக மாத்திரமே வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் சிறிகொதவின் நிழல் கட்சியின் மீது விழுந்ததினால் நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த இடத்தில் இருக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் குப்பை கூலங்களில் துர்நாற்றம் வீசம் போது மக்களுக்கு தங்களை நினைவு வந்ததாகவும், கொச்சிக்கடையில் இருந்து மட்டக்களப்பு வரையில் குண்டுகள் வெடித்த போது மக்களுக்கு தங்களை நினைவு வந்ததாகவும் தெரிவித்த அவர், இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவானதாகவும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மதத்தினருக்கும் தனது வணக்கஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்று எண்ணக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
365 நாட்களும் நாட்டை பாதுகாக்க கூடிய ஒருவர் நாட்டிற்கு தேவை எனவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் செய்வேன் என்று செல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும் எனவும், மக்களை ஏமாற்றாத ஒருவர் வேட்பாளராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்று ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இன்று அரசியல் எனும் வார்த்தையை வெறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நேசிக்கும் ஒருவரை மக்கள் வேண்டிக் கொள்வதாகவும், தன்னுடைய விருப்பத்தை விடவும் நாட்டின் விருப்பமே தனக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கூறியவற்றை அவதானத்திற் கொண்டு புதிய ஒருவரை தேடியதாகவும், தான் தெரிவு செய்யாவிடினும் கோட்டாபய ராஜபக்ஷ உங்களது சகோதரர் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய எப்போது தன்னை ஜனாதிபதியாக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை எனவும் உங்களை வலுப்படுத்துவதற்காக அன்றி கோட்டாவை வலுப்படுத்தவதற்காக அவரை நியமிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையில் கைவைக்க யாரிற்கும் இடமளிக்க மாட்டேன்
வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியன் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமித்தமை தொடர்பில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவிப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புரட்சிகரமான மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தான் நாட்டை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எதிர்பகாலத்தில் தேவையான ஒரு தலைவரை வழங்க தயாராக இருப்பதாகவும் எப்பொதும் எல்லைகளுக்கு உட்பட்டு சேவை செய்வதில்லை எனவம் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டின் இறையாண்மையில் கைவைக்க யாரிற்கு இடமளிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிற்கு நாட்டை நேசிக்கும் தலைவர் ஒருவர் வேண்டும் எனவும், ஜனாதிபதி ஒருவரிடம் இருந்து மக்கள் இதனையே எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை அமைத்த பின்னர் முதலாவதாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இலங்கையை பாதுகாப்பான நாடாக அமைக்க முடியும் என தான் நம்புவதாகவும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாப்பான நாட்டை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய தனது அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.