ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள நிலையில் பலர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நாளை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளதாக உடுவே தம்மாலோக தேரர் முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்குமாறு விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாளைய தினமே மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதமர் பதவியை வழங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.