Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊழல் தொடர்பாக செய்திவெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!

ஊழல் தொடர்பாக செய்திவெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!

0 minutes read

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்   செயலாளர் செ.நிலாந்தனை விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் இதுபோன்ற விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக அவரை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More