வவுனியாவிற்கு புதிய பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் புதன் கிழமையில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன
வவுனியாவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய திரு க.உதயராசா மீது பல்வேறு காணி முறைகேடு தொடர்பான முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சிற்கும் பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக மாவட்ட செயலகத்தில் இணையுமாறு குறித்த பிரதேச செயலருக்கு அரச அதிபர் ஊடாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாவட்ட செயலகத்திற்கு இணைக்கப்பட்டிருந்த திரு க.உதயராசா வவுனியா பிரதேசத்தை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு நடவடிக்கைகள் அரச அதிபரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது
முயற்சி பயனளிக்காத குறித்த பிரதேச செயலர் தொடர்விடுமுறையை பெற்று பௌத்த பிக்குகளின் உதவியுடன் பிரச்சினையை மூடி மறைக்க முயல்வதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் ஊடாக வவுனியா மாவட்ட அரச அதிபர் ஹனீபாவிற்கு பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது அதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக புதிய பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திரு கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதேச செயலாளர் நியமனம் ஊழல் அற்ற சிறந்த சேவையை மக்களுக்கு கிடைக்க வழி செய்யும் என வவுனியா பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.