Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓமானின் சுல்தான் காபூஸ் பின் சையத்தி இரங்கல் தெரிவித்த இலங்கை .

ஓமானின் சுல்தான் காபூஸ் பின் சையத்தி இரங்கல் தெரிவித்த இலங்கை .

1 minutes read

ஓமானின் சுல்தான் காபூஸ் பின் சையத்தி அரேபிய உலகின் நீண்டகால ஆட்சியாளரான இவர் மறைவுக்கு இலங்கை இரங்கல் தெரிவித்துள்ளது.

இரங்கல் செய்திகளை ஓமானுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர்  அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது மறைவு தங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் இலங்கை மக்கள் மற்றும் எனது சார்பாக, அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓமான் மக்களுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவிப்பதாக  தெரிவித்துள்ளார்.

ஓமான் ஒரு முற்போக்கான மற்றும் அமைதியான தேசமாக மாற்றப்பட்டதாற்கு சுல்தான் காபூஸ் பின் சையத்தின் தொலைநோக்குத் தலைமையே கரணம் என்றார் .இவர் ஆட்சி  கீழ் கடந்த 50 ஆண்டு காலம் ஓமான்செயற்பட்டது .

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்  ஒரு புத்திசாலித்தனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள தேசியத் தலைவர் இழந்துவிட்டது என்றும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பை எப்போதும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More