ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தலைமைத்துவம் தொடர்பாக இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) மாலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற நிலையில் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.
அடுத்த வார ஆரம்பத்தில் முடிவு ஒன்றை எடுப்பதற்கான சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் மாற்றம் நிகழாது என ரணில் தரப்பு உறுதியாக தெரிவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.