0
வவுனியா பிரதேச செயலகத்தின் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் தலைமையில் செயலக விளாத்தியடி பிள்ளையார் விநாயகர் ஆலயத்தில் செயலக அதிகாரிகள், பணியாளர்கள், சமூக முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்த பொங்கல் விழா நடைபெற்றது.
பொங்கல் பூஜையைத் தொடர்ந்து, செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேசத்தின் மூத்த கலைஞர்களும், இளம் கலைஞர்களும் கலந்து கொண்ட கலாசார நிகழ்ச்சிகளும் விமரிசையாக இடம்பெற்றன.