முல்லைத்தீவின், கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராகச் செயற்பட்டுவந்த தென்பகுதியைச் சேர்ந்த மீனவர்ஒருவர்ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் யா-எல பகுதியைச் சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று வில்லுக்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.