1
யாழ்.குருநகர் பகுதியில் தற்போது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .கடைக்கு சென்ற பெண்களை கேலி செய்த காரணத்தினால் அங்கிருந்த ஆண்கள் இருவருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாடு தாக்குதலாக மாறியுள்ளதோடு, இருவரும் கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது காயங்களுக்குள்ளான நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.