பாடசாலைகளில் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்தல் , மற்றும் ஆசியர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைகாலமாக பெற்றோர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.
இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி வருவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
மேலும் பாடசாலை, நிர்வாகம்,ஆசிரியர்கள், மற்றும் குறைபாடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் இருப்பின் பெற்றோர், மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சுக்கு தங்களது முறைப்பாடுகளை கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகளை Isurupaya, Battaramulla – Pannipitiya Rd, Battaramulla 10120, Sri Lanka என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த செயல்பாடானது ஜனாதிபதி கோட்டாபயவின் நேரடி உத்தரவின் பெயரில் நடைபெறுவதாகவும் இதில் அரசியல் தலையீடுகள் செல்வாக்கு செலுத்தாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.